திருக்குறள்

591.

உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார் உடைய துடையரோ மற்று.

திருக்குறள் 591

உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார் உடைய துடையரோ மற்று.

பொருள்:

ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர் ஊமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.

மு.வரததாசனார் உரை:

ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.

சாலமன் பாப்பையா உரை:

ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?.